jump to navigation

இதெல்லாம் எங்கபோய் முடியுமோ?. July 27, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

இதெல்லாம் எங்கபோய் முடியுமோ?.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4290-இதெல்லாம்-எங்கபோய்-முடியுமோ

Here is the message that has just been posted:
***************
இதெல்லாம் எங்கபோய் முடியுமோ?
• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.

• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.

• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.

• 4 நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.

• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.

• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.

• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.

• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம் திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து கொள்வார்கள்.

• டூவீலரில் ரிவர்யூ மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.

• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.

• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க முடியாது.

• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின் பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன் சென்று நிறுத்தவேண்டும்.

• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது, வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.

• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.

• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.

* அரசு – தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் டிரைவர் கௌரவம் என்னாவது?.
***************

​News & Knowledge to Share மச்ச சாஸ்திரம். July 23, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​
News & Knowledge to Share மச்ச சாஸ்திரம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4258-மச்ச-சாஸ்திரம்

Here is the message that has just been posted:
***************
*மச்ச சாஸ்திரம்*

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள்.

பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

*ஆண்களுக்கான மச்ச பலன்*

புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் & தனயோகம்
வலது புருவம் & மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்

வலது கண் & நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்

மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்

இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்

கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

*பெண்களுக்கான மச்ச பலன்*

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்
நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை & பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்

வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை .

Source:http://astrology.dinakaran.com/Macha-sastram.aspx
***************

Health & Fitness Suggestions – உடல் பருமனை குறைக்க. July 21, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

Health & Fitness Suggestions – உடல் பருமனை குறைக்க.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4239-உடல்-பருமனை-குறைக்க

Here is the message that has just been posted:
***************

*
தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Source:harikrishnamurthy (http://harikrishnamurthy.wordpress.com/author/harikrishnamurthy/)
*
***************

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட் டி! July 20, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!
This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4224-சர்க்கரைக்கு-பதிலாக-கருப்பட்டியை-பயன்ப

Here is the message that has just been posted:
***************
​​
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!

பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய காரைக்-குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர். சொக்க-லிங்கம், ‘‘இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது… கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும்கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது’’ என்றார்.

** S0urce: தமிழன் சித்த மருந்தகம் (https://www.facebook.com/tamizhansiddha?hc_location=timeline)**

***************

News & Knowledge to Share 1நெல்லி=4ஆப்பிள். July 16, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​
News & Knowledge to Share 1நெல்லி=4ஆப்பிள்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4178-1நெல்லி-4ஆப்பிள்

Here is the message that has just been posted:
***************

இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய்.

* நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

* நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

* நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

* நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

* உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

* நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

பசுமைப் புரட்சி Green Revolution
***************

​ வெறும் காலில் நடப்பது நல்லதா? July 16, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

News & Knowledge to Share ​​
வெறும் காலில் நடப்பது நல்லதா??.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4177-வெறும்-காலில்-நடப்பது-நல்லதா

Here is the message that has just been posted:
***************

சாப்டறப்ப கூட கால்ல செருப்பு போடறத அந்தஸ்து பாக்ற தலைமுறைல வாழறோம் நாம்…..
பாதரட்சைகள் இருந்த காலத்திலும் வெறும் காலில் நடப்பவர்களை நன்மையுள்ளவர்களின் கணத்தில் உட்படுத்தியிருந்தனர்.
ஒருவர் அணிந்திருக்கும் செருப்பின் விலையிலிருந்து அவருடைய சமுக நிலையை மதிப்பது இன்றைய சமூகம். உடற்பயிற்சிக்காக நடக்றப்பகூட டைட் ஷீ போட்டுட்டு நடக்றது.. வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற தாழ்வு மனப்பான்மையே பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது. வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என்று நவீன மருத்துவ இயல்அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது.

கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்பதும் பாதத்துக்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை இருதயம், விறுநீரகம் முதலிய எல்லா உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுடத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்லை துரிதப்படுத்தும். பாதத்துக்கடியில் ஊசிகள் குத்திச் செய்யும் அக்யுப்பங்சர் என்னும் சீன சிகிட்சையின் மறு உருவமே செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் இயற்கை நமக்களிக்கின்றது.

(அதிலும் செம்மண்ல வெறும் காலில் நடந்தா ரொம்ப நல்லது நானே கண்டுபிடிச்சது நோ கால் ஆணி நோ பித்த வெடிப்பு)
(பிளைட்லல்லாம் செருப்பை கொண்டு வந்து இறக்றவங்களுக்கு இது பற்றி ரகசியம்லாம் சொல்லாதிங்க ஒகே..
– சுபா வள்ளி.

***************

​ சமையல்-Recipes ​ ​ தேங்காய் தோசை. July 15, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​
சமையல்-Recipes

​ ​
தேங்காய் தோசை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4067-தேங்காய்-தோசை

Here is the message that has just been posted:
***************

தேவையானவை :

அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
உப்பு
தேங்காய் எண்ணெய்
துருவிய தேங்காய் 3/4 கப்

செய்முறை :

அரிசி,உளுத்தம் பருப்பை ஒரே பாத்திரத்தில் ஒரு அரைமணி ஊறவைகணும்.
பிறகு துருவிய தேங்காயை மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்தவுடன் உடனடியாக தோசை வார்க்கலாம்.
காலை உணவுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
***************

​ சமையல்-Recipes ​ – ​கல் தோசை. July 15, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​

​​
​​
சமையல்-Recipes

​ – ​
கல் தோசை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4066-கல்-தோசை

Here is the message that has just been posted:
***************
தேவையானவை :

உளுத்தம் பருப்பு 1 கப்
புழுங்கல் அரிசி 4 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

புழுங்க அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்த பிறகு,அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கணும்.
பிறகு காலையில் எழுந்தவுடன் , உளுத்தம் பருப்பை 1 மணிநேரம் ஊரவைத்து, அரைக்கணும்.
அரைத்த அரிசி மாவையும் உளுத்தம் மாவையும் சேர்த்து கலக்கவும்.
அரைத்ததும் தோசை வார்க்கலாம்.
இந்த தோசைக்கு எண்ணெய் விட்டு வார்க்க கூடாது
ஒரு tissue paper அல்லது நறுக்கிய வெங்காயத்தை எண்ணெய் இல் தோய்த்து தோசை கல்லில் தடவவும்.
பிறகு தோசை வார்க்கவும்.
மேலும் இதை ‘நான் ஸ்டிக்’ இல் வார்க்ககூடாது , ‘கல் தோசை’ வார்ப்பதற்கு என்று தனி கல் இருக்கு அதில் வார்க்கலாம் ; அல்லது *’வார்ப்பட கல் ‘* லில் வார்க்கலாம்.

*குறிப்பு : கல் தோசைகல், சதுரமாக இருக்கும் Image: http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif *
***************

​​​​​ ‘தக்காளி தோசை’. July 15, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​
‘தக்காளி தோசை’.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4065-தக்காளி-தோசை

Here is the message that has just been posted:
***************

தேவையானவை :

தோசை மாவு 1 கப்
பெங்களூர் தக்காளி 2 ( ரொம்ப பொடியாக நறுக்கவும் )
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் ) தேவையானால் சேர்க்கவும்.
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு அது முழுவதுமாக வேகும் முன், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அதன் மேல் தூவவும். ( நிறையா )
அது மாவில் நன்கு ஒட்டிக்கொள்ளனும் .
பிறகு மெதுவாக திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
கண்ணுக்கு நிறைவான ‘தக்காளி தோசை’ ரெடி.
கல்லிலிருந்து எடுத்து பரிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
தக்காளி நிறைய இருப்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும் Image: http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif
***************

​ “மசால் தோசை” July 15, 2013

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​
"மசால் தோசை".

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/4064-quot-மசால்-தோசை-quot

Here is the message that has just been posted:
***************

ஸோ, மேலே சொன்ன மாவு தான் பேஸ். இனி வரும் குறிப்புகளில் அந்த தோசை மாவை வைத்து எப்படி பல விதங்களில் தோசை வார்க்கலாம் என்று பார்க்கலாம்.
முதலில் எல்லோரும் விரும்பும்* "மசால் தோசை" * மசால் தோசை செய்ய முதலில் நாம் மசாலா செய்து கொள்ள வேண்டும்.

தேவையானவை :

தோசை மாவு 2 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

உப்பு
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிவைத்துள்ள பச்சை மிளகாயை போடவும்.
கொஞ்சம் வதங்கினதும், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கிளறவும்.
மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு இருபுறமும் மொறுமொறுப்பாக எடுக்கவும்.
பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
பிறகு அதை மடித்து பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும். Image: http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif

*குறிப்பு: மசாலா வைக்கும் போது அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணை வைத்து மடித்தால், பட்டர் மசாலா தோசை ஆகிவிடும் Image: http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif *

***************