jump to navigation

ஆகாச தீபம் 24-10-14 முதல் August 28, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

ஆகாச தீபம் 24-10-14 முதல்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8445-ஆகாச-தீபம்-24-10-14-முதல்

Here is the message that has just been posted:
***************

ஆகாச தீபம் கடனை போக்கும்: 24-10-2014 முதல் 22-11-2014 முடிய.

கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோதத்யாத் மாஸமேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).

சாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில் தனது வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு

அருகில் உயரமான ஒரு ஸ்தம்பம் நட்டு அதன் நுனியில் எட்டு திரியுள்ள ஒரு விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றி வைக்க வேண்டும்.

அல்லது தனது வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.

24-10-2014 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்

ஸங்கல்பம் செய்துகொண்டு , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்தில் அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்

லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .
அனைத்து கடன்களும் விலகும். லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.

எல்லா நாட்களும் முடியாவிட்டாலும் முடிந்த நாட்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .

தடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.

ஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..
***************

​​​ஹோமங்கள-பயன்கள் August 23, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​​
ஹோமங்கள்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8889-ஹோமங்கள்

Here is the message that has just been posted:
***************
​​
ஹோமங்கள்

ஹோமம் நடத்துவது ஏன்? காலம் மாறும்போது எல்லா துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹோமங்களை நடத்த வேண்டும். இறைவன் ஹோமங்கள் மூலமாக நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். அக்கோரிக்கைகள் அக்னிகுண்டங்கள் மூலமாக இறைவனை சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது.

முக்கிய ஹோமங்கள்

கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)
அவஹந்தி ஹோமம் (விவசாயம்)
ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)
லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)

லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)

சர்வமங்களங்களையும், மேன்மையையும், 16 செல்வங்களையும் அடையவும், நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் "லட்சுமி ஹோமம் செய்ய வேண்டும்

மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)

திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்.

அக்னியின் பெருமை

ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கொண்டு பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.

***************

Elaborate Samopakarma Goshti at Bangalore on 29/08/2014 August 19, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

Dear Samavedins,
The Samopakarma on 29/08/2014 ( Friday-Holiday on account of Ganesha Chathurthi)) will be held at Seetharama Mandir, 23/11, Gangadhara Chetty Road, Bangalore-560042 next to RBANMS School, near Ulsoor Lake. ( The Brahmana Samooham).This will be conducted by Vedamurthy Brahmasri A V Subramanya Deekshithar and will commence at 8.30am.

Sri Jayanthi for Srimad Andavan Ashramam — why on Sep 15th? August 19, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

Srirangam Srimad Andavan Ashrama sishyas — rather Munithraya samprathayasthars — will celeberate Sri Jayanthi on September 15, 2014 (AvaNi 30). Sri Ranganatha Paduka describes in detail the reasons for deciding this date. A pdf is attached. To read one or two pages of this pdf may strain your eyes. Kindly excuse me for my inefficiency.

srijayanthi nirnayam.pdf

Munithraya Sri Jayanthi – 15-09-2014​ August 7, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
add a comment

​Munithraya Sri Jayanthi – 15-09-2014​

On the niyamanam of HH Srimad Andavan, Sri Jagannathan swami, Ashrama Arathakar, informs that Munithraya Sri Jayanthi falls on September 15 Avani 30. Please wait for this month’s Sri Ranganatha Paduka to read more on this decision.